top of page

பெருமாள் ஆதித்தம்

மூத்த வக்கீல்/மேலாண்மை இயக்குநர்

0L7A0269a_edited.jpg

ஆசிரியப் பணியில் இருந்த திரு பெருமாள் ஆதித்தம், அங்கிருந்து தன்னை முன்னேற்றி சிங்கப்பூரின் முதன்மையான வழக்கறிஞர் மற்றும் வழக்குரைஞராக ஆகியுள்ளார். 1981ல் அவர் ஆங்கில பாருக்கு அழைக்கப்பட்டார், 1982ல் சிங்கப்பூரில் ஒரு வழக்கறிஞர் மற்றும் வழக்குரைஞராக அனுமதிக்கப்பட்டார்.

திரு. பெருமாளுக்கு 35 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் உள்ளது; மாநில நீதிமன்றங்கள், உயர்நீதிமன்றம் மற்றும் முறையீட்டு நீதிமன்றத்தில் பல வழக்குகள், முறையீடுகளை அவர் நடத்தியுள்ளார். ‘யியோ பெருமாள் மொஹிதீன் அண்டு பார்ட்னர்ஸ்’ நிறுவனத் தோற்றத்திற்கு இவரும் முக்கியப் பங்களிப்பை வழங்கியுள்ளார்.

திரு. பெருமாள், வெளிநாட்டுப் பணியாளர்களுடன் தொடர்புடைய தொழிற்சாலை மற்றும் சாலைப் போக்குவரத்து விபத்துக் கோரிக்கைகளில் தனிப்பட்ட காய வழக்குப் பணியில் ஈடுபட்ட முன்னோடி வழக்குரைஞர்களில் ஒருவராவார். நீதி நிலைநாட்டப்படுவதை உறுதிசெய்வதற்காக, அவர் தன்னுடைய வெளிநாட்டுப் பணியாளர்களுக்காகப் போராடுபவர். அவர் நேரடியான அணுகுமுறை கொண்ட ஒரு கண்டிப்பான மற்றும் உறுதியான வழக்கறிஞராகவும், மன உறுதி கொண்ட வழக்குரைஞராகவும் அறியப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட காய வழக்குகளுடன், குடிமையியல், வணிக மற்றும் குற்றவியல் வழக்குகளிலும் திரு. பெருமாள் ஓர் அனுபவம் மிக்க வழக்கறிஞர் ஆவார்.

திரு. பெருமாள் திருமணமானவர், அவருக்கு ஒரு மகள் உள்ளார், அவர் ஆர்வத்துடன் கால்ஃப் விளையாடுபவர், சுறுசுறுப்பான விளையாட்டு வீரர்.

  • Facebook
  • Instagram
  • LinkedIn

© 2020 by Yeo Perumal Mohideen Law Corporation. Singapore UEN No.200414768C

bottom of page